பயணிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் - போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர்


பயணிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் - போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர்
x

டிரைவர்கள், நடத்துனர்கள் பணியின் போது பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

சென்னை,

தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்க்க , போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில்,

* டிரைவர்கள், நடத்துனர்கள் பணியின் போது பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

* பேருந்தின் பழுதுகளை சரி செய்து, சரியான நேரப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்த்டத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும்.

* அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.

*நிர்ணயிக்கப்பட்ட சரியான பயண கட்டணங்களை, பயணிகளிடம் உரிய பயணச் சீட்டு அளித்து வசூலிக்க வேண்டும்.

தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்க்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Next Story