தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா


தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
x

ஆற்காட்டில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் புதிய மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு, ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு, நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா ஆற்காடு கலவை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு சங்க மாநில பொதுச்செயலாளர் வெ.சரவணன் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் க.அருள்சங்கு, மாநில பொருளாளர் த.ராமஜெயம், அமைப்பு செயலாளர் பூ.ஜெகன், மகளிர் அணி செயலாளர் மு.செல்லதாயி, தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரிவு மாநில செயலாளர் பழ.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் ஓய்வுபெறும் மேல்விஷாரம் எம்.டி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை எம்.ஜாய்பியுலாவிற்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் டேவிட், தலைவர் ராமரவி, வேலூர் மாவட்ட செயலாளர் மைக்கேல்ராஜ், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் செல்லக்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் செ.கதிர்காமம் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.


Next Story