சைக்கிளில் கல்லூரி சென்ற மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி


சைக்கிளில் கல்லூரி சென்ற மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி
x

சென்னை மயிலாப்பூரில் சைக்கிளில் கல்லூரி சென்ற மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த 18 வயதான மாணவி, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து சி.பி.ராமசாமி சாலை வழியாக கல்லூரிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து மாணவி தனது தந்தையிடம் கூறினார். அவர் அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த தனுஷ் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story