தொடர் விடுமுறையை முன்னிட்டு இரு நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரெயில் சேவை


தொடர் விடுமுறையை முன்னிட்டு இரு நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரெயில் சேவை
x

தொடர் விடுமுறையை முன்னிட்டு இரு நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுமென மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

"ஆயுத பூஜை 23-10-2023 (திங்கட்கிழமை) மற்றும் சரஸ்வதி பூஜை 24-10-2023 (செவ்வாய் கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை, நாளை 20-10-2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 21-10-2023 (சனிக்கிழமை) இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இரண்டு வழித்தடத்திலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மெட்ரோ ரெயில் நீட்டிப்பு சேவை 20-10-2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 21-10-2023 (சனிக்கிழமை) மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story