உடுமலை திருப்பதி கோவிலில் 5- ம் ஆண்டு விழா


உடுமலை திருப்பதி கோவிலில் 5- ம் ஆண்டு விழா
x
தினத்தந்தி 19 Jun 2023 9:48 AM GMT (Updated: 19 Jun 2023 10:50 AM GMT)

உடுமலை திருப்பதி கோவிலில் 5- ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.

திருப்பூர்

தளி

உடுமலையை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 5-ம் ஆண்டு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக காலை 7 மணிக்கு விஷ்வக்சேனர், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரிப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சாமிகளுக்கு திருமஞ்சனம் சாற்றும் நிகழ்ச்சியும், 8.30 மணிக்கு புற்றுக்கோவிலில் இருந்து பால் குடம் புறப்படுதல், இதையடுத்து ரேணுகாதேவிக்கு திருமஞ்சனம் சாற்றுதல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு திருமஞ்சனம் சாற்றுதல், மாலை 6 மணிக்கு உடுமலை திருப்பதி மற்றும் எஸ்.வி. புரம் ரேணுகாதேவி பஜனை குழுவினரின் பஜனையும் நடைபெறுகிறது.

நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு வெங்கடாச பெருமாள் மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம் சாற்றும் நிகழ்ச்சியும் ஹோமம் நவகலச ஸ்தாபிதமும், காலை 11.30 மணிக்கு விசேஷ அலங்கார பூஜை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் திருப்பணி குழுவினர் உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

------------


Next Story