அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட மின்சாரம்... போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் - சேலம் அருகே பரபரப்பு


அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட மின்சாரம்... போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் - சேலம் அருகே பரபரப்பு
x

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே முன்னறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே முன்னறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தம்மம்பட்டியில் உள்ள வணிக வளாக கட்டடத்திற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக, அந்த பகுதியில் காலை 10.30 மணியளவில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்களும் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தை தொடர்ந்து, மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story