வண்டலூர் பூங்கா ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


வண்டலூர் பூங்கா ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வருகிற 31-ந்தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் வண்டலூர் பூங்கா ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 60), இவர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். ரமேஷ் வருகிற 31-ந்தேதி பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலையில் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்னும் 4 நாட்களில் ஓய்வு பெறும் நிலையில் இருந்த ரமேஷ் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிரமாக சக ஊழியர்களிடம் விசாரித்தனர்.

இந்த சம்பவம் வண்டலூர் உயிரியல் பூங்கா குடியிருப்பு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story