கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு


கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு
x

கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

போரூர்,

சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

கடந்த மாதம் வரை தினசரி 480க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இன்று 360லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது.

வரத்து குறைவு காரணமாக கேரட், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. அதேபோல் கத்தரிக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்து உள்ளது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் கேரட் மற்றும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ100-க்கும், அவரைக்காய் மற்றும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ80-க்கும் விற்கப்படுகிறது.


Next Story