விழுப்புரம்: விவசாய நிலத்தின் மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி - நிலத்தின் குத்தகைதாரர் கைது


விழுப்புரம்: விவசாய நிலத்தின் மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி - நிலத்தின் குத்தகைதாரர் கைது
x

மரக்காணம் அருகே விவசாய நிலத்தின் மின்வேலியில் சிக்கி 3 பேர் பலியான சம்பவத்தில் நிலத்தின் குத்தகைதாரரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பிரம்மதேசம் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்கம்பியில் சிக்கி வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் (வயது 45), வெங்கடேஷ் (வயது 44) மற்றும் சுப்பிரமணி (வயது 40) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், நிலத்தில் மின்வேலி அமைத்த வரை கைது செய்யக் கோரியும் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மரக்காணம் வட்டாட்சியர் சரவணன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் பிரம்மதேசம் போலீசார் மின்வேலியை அமைத்த நிலத்தின் குத்தகைதாரர் ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சடகோபன் (63) என்பவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story