விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார்பட்டியில் நாளை தேரோட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார்பட்டியில் நாளை தேரோட்டம்
x

திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் சதுர்த்தி விழாவையொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் சதுர்த்தி விழாவையொட்டி நாளை தேேராட்டம் நடக்கிறது. மாைல 4.30மணி முதல் இரவு 10மணி வரை மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.

சதுர்த்தி விழா

திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 6ஆம் திருநாளான நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. 8ஆம் திருநாளான இன்று வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டம்

9-ம் திருநாளான நாளை(திங்கட்கிழமை) மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை 4.30மணி முதல் இரவு 10மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 10-ம் திருநாள் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் மூலவருக்கு மோதகம்(கொளுக்கட்டை) படையல் செய்யும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story