முழு கொள்ளளவை எட்டும் நிலையில் பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு


முழு கொள்ளளவை எட்டும் நிலையில் பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
x

பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் புழல் ஏரிக்கு 380 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

திருவள்ளூர்

பூண்டி ஏரியில் இருந்து

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்மரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி கடந்த மே 3-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பூண்டி நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது.இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடு கிடு என்று உயர்ந்து வருகிறது.

380 கனஅடி தண்ணீர் திறப்பு

நேற்று காலை நீர்மட்டம் 32.40 அடி அடியாக பதிவாகியது. 2.340 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. ஏரி நீர் மட்டம் முழு கொள்ளளவு உள்ள எட்டும் நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு நேற்று மாலை பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 380 தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதே போல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரிக்கு மழை நீர் வினாடிக்கு 200 கன அடி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு 290 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது.


Next Story