காஞ்சீபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


காஞ்சீபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

காஞ்சீபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

காஞ்சிபுரம்

குறைதீர்க்கும் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 255 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டுறவு நகர வங்கி சார்பில், 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் கடனுதவிகளும், 3 பயனாளிகளுக்கு ரூ.65 ஆயிரம் மகளிர் சிறுவணிகக் கடனுதவிகளும், 2 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் ஆடவர் சிறுவணிகக் கடனுதவிகளும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாநில அளவில் நடைபெற்ற கிக்பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உடனடி நடவடிக்கை

இந்த கூட்டத்தில் திருப்புக்குழியை சேர்ந்த உஸ்மான் ஷெரிப் என்பவர் காதொலி கருவி கேட்டு மனு அளித்தார்.

அதைதொடர்ந்து. அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அவருக்கு மாவட்ட கலெக்டர் காதொலி கருவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பிட் ஜெயின் காஞ்சீபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story