மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்


மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில்  நலத்திட்ட உதவிகள்
x

மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை ஆன்மிக மக்கள் இயக்க நிறுவன தலைவர் கோ.ப. அன்பழகன் வழங்கினார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளாரின் தந்தையும், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனருமான கோபால் நாயக்கரின் 24-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆன்மிக மக்கள் இயக்க நிறுவன தலைவர் கோ.ப. அன்பழகன் வழங்கினார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர் அணி தலைவர் கோ.பா. செந்தில்குமார், முன்னாள் எம்பி. துரை, மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வக்கீல் அகத்தியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மதுரை மாவட்ட ஆன்மிக இயக்கத்தினர் சதீஷ்குமார், லிங்கநாதன், சிவக்குமார், சுந்தரம், சரளா மற்றும் பலர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story