தொப்பூர் அருகேகிணற்றில் விவசாயி உடல் மீட்பு


தொப்பூர் அருகேகிணற்றில் விவசாயி உடல் மீட்பு
x
தினத்தந்தி 28 Dec 2022 6:45 PM GMT (Updated: 28 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே ஏலகிரி அப்பாவு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் காவேரி (வயது 80). விவசாயி. வயது முதிர்வு காரணமாக காவேரிக்கு கண் குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வீட்டருகே உள்ள விவசாய கிணற்றில் காவேரி இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்து காவேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story