வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க நாட்டுக்கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும்


வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க நாட்டுக்கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 28 Jun 2023 11:50 AM GMT)

வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க நாட்டுக்கோழிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 2 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) தலா 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு முறையே 8 கி.மீ., 10 கி.மீ., 10 கி.மீ.வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும் இருக்கும்.

வெள்ளை கழிச்சல் நோய்

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் நாட்டு கோழி குஞ்சுகளை மின்சார விளக்கு உதவியுடன் வெதுவெதுப்பான இடங்களில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். பொதுவாக நாட்டு கோழி வளர்க்கும் விவசாயிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும். மேலும் வெள்ளைகழிச்சல் நோய் நாட்டு கோழிகளுக்கு வராமல் தடுக்க, தடுப்பூசியுடன் கோழிகளுக்கு மூலிகை மருத்துவ முறைகளையும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story