துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி கொலை - கணவன் வெறிச் செயல்...!


துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி கொலை - கணவன் வெறிச் செயல்...!
x
தினத்தந்தி 9 Jun 2022 12:12 PM GMT (Updated: 10 Jun 2022 6:43 AM GMT)

ஆம்பூர் அருகே துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் சைது செய்தனர்.

திருப்பத்தூர்:


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பங்காளமேட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 31). இவரது மனைவி நந்தினி(27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று நந்தினி தனது கணவர் மற்றும் மகள்களுடன் ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள தாய் வீட்டிற்கு வந்து உள்ளார்.

அப்போது கணவன் மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை குடும்பத்தினர் அருகே உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது விக்னேஷ்-நந்தினி மட்டும் வீட்டில் இருந்து உள்ளனர்.

இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த கணவன் விக்னேஷ் நந்தினி அணிந்திருந்த துப்பட்டாவை பறித்து அவரது கழுத்தை இறுக்கி உள்ளார். இதில் மூச்சு திணறி மனைவி நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர் வீட்டுக்கு வந்த போது நந்தினி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கு இருந்து கணவன் விக்னேசை பிடித்து உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் போலீசார் நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவன் விக்னேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story