கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒரு பெண் கைது


கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒரு பெண் கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா அருகே உள்ளது இருங்குளம் காப்பு காடு. இது தமிழக-ஆந்திர எல்லையையொட்டிய தமிழகத்தை சேர்ந்த ஆள்நடமாட்டம் இல்லாத வனபகுதி ஆகும். கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி இந்த காப்பு காட்டில் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அருகே உள்ள நாகராஜபுரத்தை சேர்ந்த தருண் குமார் (வயது 20) என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், ஈகோ பிரச்சினை காரணமாக நண்பர்கள் சிலர் குடிபோதையில் ஆந்திர வாலிபர் தருண் குமாரை கொலை செய்திருப்பதும் அதற்கு சிலர் உடந்தையாக இருந்திருப்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே மாநெல்லூரைச் சேர்ந்த கவுதம் (22), மானேஷ் (22), இன்பராஜ் (20), லோகநாதன் (22) உள்பட 8 பேரை பாதிரிவேடு போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மாநெல்லூரை சேர்ந்த இந்துமதி (43) என்கிற பெண்ணை பாதிரிவேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story