விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள வீரார்பட்டியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி கன்னித்தாய் (வயது 45). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டும், கணவருக்கு தெரியாமல் குடும்ப செலவிற்காக வெளியே கடன் வாங்கி இருந்ததாகவும், இதனால் இவர் மன வேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கன்னித்தாய் மலைப்பட்டி பஸ் நிறுத்தம் பின்புறம் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கன்னித்தாயின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story