விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

போடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

போடி அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயியம்மாள் (வயது 56). இவர், போடியில் பால் பண்ணை வைத்து நடத்தி வந்தார். இவர், உடல்நலக்குறைவால் அவதியடைந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் நேற்று முன்தினம் அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story