திண்டிவனத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை:கடன் பிரச்சினையில் விபரீத முடிவு


திண்டிவனத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை:கடன் பிரச்சினையில் விபரீத முடிவு
x

திண்டிவனத்தில் கடன் பிரச்சினையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

வளையல் வியாபாரம்

திண்டிவனம் கிடங்கல் -1 பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கவிதா (வயது 47) இவர்களுக்கு சங்கீதா (24), சந்தியா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் வெங்கடேசன் இறந்தார். இதையடுத்து கவிதா வளையல் வியாபாரம் செய்து தனது மகள்களை பராமரித்து வந்தார். மேலும் மூத்த மகள் சங்கீதாவுக்கு திருமணமும் செய்து வைத்தார்.

இதற்காக கவிதா பல இடங்களில் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவர் பரிதவித்து வந்துள்ளார். இதனிடையே கடன் கொடுத்தவர்கள் கவிதாவிடம் பணத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது.

போலீசார் விசாரணை

இதனால் கடந்த சில நாட்களாக கவிதா மிகுந்த மன உலைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கவிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story