தூக்குப்போட்டு பெண் சாவு


தூக்குப்போட்டு பெண் சாவு
x

நாமக்கல்லில் தூக்குப்போட்டு பெண் இறந்தார்.

நாமக்கல்

நாமக்கல் பொன்விழா நகரை சேர்ந்தவர் சரண்யா (வயது 32). இவர் தனது கணவர் நித்யாகரனுடன் லண்டனில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளாள். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து குடும்பத்துடன் நாமக்கல் திரும்பிய சரண்யா தந்தையின் வீட்டில் இருந்து வந்தார்.

இங்கு மன அழுத்தம் காரணமாக தூக்கம் வரவில்லை என்பதால், சிகிச்சை பெற்றுக்கொண்டு மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தந்தையின் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு சரண்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story