ரெயில் மோதி பெண் சாவு


ரெயில் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 14 Jun 2023 4:10 PM GMT (Updated: 15 Jun 2023 9:36 AM GMT)

ரெயில் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சுமதி (வயது 52). இவர், மணவூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயில் மோதியதில் சுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story