விஷம் குடித்து பெண் சாவு

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தாரமங்கலம்:-
தாரமங்கலம் அருகே ராமிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குள்ளம்மாள் (வயது 80). இவர், நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் அவர் குணமாகவில்லையாம். இதனால் மனம் உடைந்த குள்ளம்மாள் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் கந்தசாமி மற்றும் உறவினர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குள்ளம்மாள் பரிதாபமாக இறந்தார். குள்ளம்மாள் தற்கொலை குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





