மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கல்லூரணி பொம்ம கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் தனது தாயார் சரோஜா (65) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு எம்.ரெட்டியபட்டியில் உள்ள தனது சகோதரி குணசுந்தரி வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேகத்தடையை கவனிக்காமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதில் பின்னால் உட்கார்ந்து இருந்த சரோஜா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் சரோஜாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சரோஜா அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story