டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரும்பாக்கம் ஊராட்சி பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் தனம் (வயது 53). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை விவசாய பயிர் நடவு செய்ய ஒரு டிராக்டரில் அமர்ந்து வேலைக்கு சென்றார்.

சித்தம்பாக்கம்- ஒதிக்காடு சாலையில் சென்ற போது வேகத்தடையில் டிராக்டர் ஏறி இறங்கியது. இதில் டிராக்டரில் அமர்ந்திருந்த தனம் தவறி கீழே விழுந்தார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து தனத்தின் மகள் நிர்மலா வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பலியான தனம் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story