மேம்பாலத்தில் இருந்து குதித்த பெண் சாவு


மேம்பாலத்தில் இருந்து குதித்த பெண் சாவு
x

மேம்பாலத்தில் இருந்து குதித்த பெண் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்


விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது மனைவி ஜான்சி ராணி (வயது 38). இவர் கடந்த வாரம் தனது மூத்தமகள் மோனிகா மேரி (12), இளைய மகள் ரித்திகா மேரி (9) ஆகிய இருவரையும் கொலை செய்ய முயற்சித்ததோடு தானும் விருதுநகர் ெரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இவர் மீது விருதுநகர் கிழக்கு போலீசார் ஜான்சிராணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் படுகாயம்அடைந்த ஜான்சிராணி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story