பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலியானார்.
போளூர்
பாம்பு கடித்து பெண் பலியானார்.
போளூர் மலையோர தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி லலிதா (வயது 55). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை 11 மணியளவில் போளூரை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனது நிலத்தில் மாட்டிற்கு லலிதா புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது காலில் பாம்பு கடித்தது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





