அறந்தாங்கியில் பெண் வெட்டிக்கொலை


அறந்தாங்கியில் பெண் வெட்டிக்கொலை
x

அறந்தாங்கியில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்ேகாட்டை மாவட்டம், அறந்தாங்கி எல்.என்.புரம் நவரத்தின நகரை சேர்ந்தவர் பிரம்மன் மனைவி சுப்பம்மாள் (வயது 45). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுப்பம்மாளுடன் அவரது மகன் அருண்பாண்டி வசித்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுப்பம்மாள் கணவனை பிரிந்து தனியாக நவரத்தின நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுப்பம்மாள் இறந்து கிடந்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த அருண்பாண்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுப்பம்மாளை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சுப்பம்மாளை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story