மின்சாரம் தாக்கி பெண் பலி

திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
கடலூர்
திட்டக்குடி,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி சித்ரா(வயது 37). தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். பின்னர் குளித்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறியை இயக்குவதற்காக சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story