மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

திருவாடானை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
தொண்டி,
திருவாடானை மேல தெருவைச் சேர்ந்தவர் அன்பு (வயது 75). இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் மதுரை-தொண்டி சாலையில் நடந்து சென்றுள்ளார். செங்கமடை விலக்கு சாலை அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் அன்பு படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் விருதுநகர் மாவட்டம் கூவார்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





