கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை


கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
x

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 62). இவருடைய மனைவி நாகேஸ்வரி (57). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் விரக்தி அடைந்த நாகேஸ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story