சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து


சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து
x

மதுரை அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது.

மதுரை

மதுரை மதிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூமயில் (வயது 51). இவருக்கும் இவரது சகோதரர்கள் 3 பேருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று பூமயில் வீட்டிற்கு வந்த அவரது சகோதரர்கள் அவரிடம் தகராறு செய்தனர். பின்னர் அவரை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இது குறித்து மதிச்சியம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அழகர்சாமி (45) என்பவரை கைது செய்தனர். மேலும் முத்துப்பாண்டி, ஹரிதாஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story