தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

ஆரணியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35), கட்டிட கூலி தொழிலாளி. இவருக்கு தீபா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கார்த்திக் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தாய், தந்தை மற்றும் மனைவி தீபாவுடன் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு கார்த்திக் மது அருந்திவிட்டு வந்த போது அவரது தந்தை பூங்காவனம் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.

உடனடியாக அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே கார்த்திக் இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story