விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பையா (வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஆந்திராவுக்கு சென்றநிலையில் இவர் நேற்று வீட்டில் இருந்தபோது பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக பொதட்டூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 33). ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்தார். ஏகாம்பரத்திற்கு நேற்று திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதுகுறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த போலீஸ்காரர் ஏகாம்பரத்திற்கு மனைவியும் 4 மற்றும் 2 வயதில் இரு மகள்களும் உள்ளனர்.


Next Story