தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

விராலிமலையில் மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

மனைவி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி. இவர் தெற்கு தெருவில் உள்ள அங்கன்வாடியில் சமையலராக வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதியன்று குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ராஜேந்திரன் மனமுடைந்த நிலையில், யாருடனும் பேசாமல் இருந்து வந்தார்.

தொழிலாளி தற்கொலை

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story