பெற்றோர் இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை


பெற்றோர் இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 18 Jun 2023 7:00 PM GMT (Updated: 20 Jun 2023 7:28 AM GMT)

செங்கோட்டையில் பெற்றோர் இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற துரை. இவருடைய ஒரே மகன் சங்கர் (வயது 28). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த மார்ச் மாதம் மாயாண்டி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். தனது கணவர் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது மனைவி கல்யாணியும் தனது கணவர் உடல் மீது மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதனால் சங்கர் தனது பெற்றோர் இறப்பால் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் செங்கோட்டை விஸ்வநாதபுரம் கலங்காத கண்டி வாய்க்காலில் சங்கர் விஷம் குடித்து பரிதாபமாக இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story