கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி


கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
x

கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணை கிருஷ்ணா நகர் அவென்யூ அலெக் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர், கட்டிடங்களுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் வேலை முடிந்து புழலில் இருந்து மாதவரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

புழல் ஜி.என்.டி. சாலையில் நாகாத்தம்மன் கோவில் அருகே வந்தபோது அதே திசையில் வந்த கன்டெய்னர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த செந்தில்குமார் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய செந்தில்குமார் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அப்துல் அகமதுகாதர் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான கொருக்குபேட்டையை சேர்ந்த லட்சுமணன் (59) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story