குண்டாறு அணையில் மூழ்கி தொழிலாளி சாவு


குண்டாறு அணையில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:45 PM GMT)

செங்கோட்டை குண்டாறு அணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

கட்டிட தொழிலாளி

செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் அரசு தொடக்கப்பள்ளி அருகில் வசித்து வந்தவர் மாணிக்கம் மகன் சுப்பிரமணியன் (வயது 27). கட்டிட தொழிாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் அவர் தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று சுப்பிரமணியன் தனது நண்பர்களுடன் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைக்கு குளிக்க சென்றார். அங்கு அணையில் நண்பர்களுடன் நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்தார்.

நீரில் மூழ்கி இறந்தார்

அப்போது சுப்பிரமணியனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

அவருடன் குளித்துக் கொண்டு இருந்த நண்பர்கள் சுப்பிரமணியனை காணவில்லை என்று அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து தண்ணீரில் மூழ்கி தேடினர். அங்கு தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story