ஊத்துக்கோட்டையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி


ஊத்துக்கோட்டையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி
x

ஊத்துக்கோட்டையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து தொழிலாளி பலியானார்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடுவை சேர்ந்வர் பழனி (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி குப்பம்மாள் கடந்த 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு சரத்குமார் என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர். சரத்குமார் ஊத்துக்கோட்டை அருகே உள்ள காசிரெட்டிபேட்டை கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பழனி நேற்று காலை ஊத்துக்கோட்டை நாகலாபுரம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, சாலை ஓரமாக உள்ள கழிவுநீர் கால்வாயில் நிலைத்தடுமாறி விழுந்து பரிதாபமாக செத்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story