சென்னையில் மரக்கிளை விழுந்து தொழிலாளி பலி

சென்னையில் மரக்கிளை விழுந்து தொழிலாளி பலியானார்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 45). இவர் அடையாறு பகுதியிலுள்ள கிரீன் வேஸ் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் தோட்ட வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று தோட்ட வேலை செய்து கொண்டிருந்தபோது அருகே இருந்த ஆல மரத்தின் கிளை ஒன்று முறிந்து துரை ராஜ் மேல் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





