அரசு பஸ் மோதி தொழிலாளி பலி


அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
x

பழனி அருகே அரசு பஸ்மோதி தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள கோதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் (வயது 23). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், பழனியில் இருந்து கோதமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பழனி-தாராபுரம் சாலையில் கோதமங்கலம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெலிக்சை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெலிக்ஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story