மது விற்ற தொழிலாளி கைது


மது விற்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 3 Sept 2023 3:00 AM IST (Updated: 3 Sept 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மது விற்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் நகரில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கபில்தேவ் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூடலூர் செவிடிப்பேட்டை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர் 12 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. பின்னர் அதை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி தாமஸ் (வயது 52) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story