உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி


உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

விழுப்புரம் ரெயில்வே மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் ரெயில்வே மருத்துவமனையில் தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி பொன்மலை ரெயில்வே மருத்துவமனையின் முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மண்டல மருத்துவ அலுவலர் ஞானாநந்தன், முதன்மை செவிலிய கண்காணிப்பாளர் லதா, முதன்மை மருந்தாளுனர்கள் ரவிக்குமார், சிவக்குமார், செவிலிய கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.


Next Story