தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு: 41 திருநங்கைகள் உள்பட 2½ லட்சம் பேர் எழுதினர்


தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு: 41 திருநங்கைகள் உள்பட 2½ லட்சம் பேர் எழுதினர்
x

தமிழக போலீஸ்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் வேலைக்கு 3,359 காலி இடங்கள் உள்ளன.

சென்னை,

தமிழக போலீஸ்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் வேலைக்கு 3,359 காலி இடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வு நடத்தப்படும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பையடுத்து 2 லட்சத்து 81 ஆயிரத்து 456 பேர் 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்தார்கள். விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வும், தமிழ் தகுதி தேர்வும் நேற்று தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. சென்னையில் 10 மையங்களில் நேற்று இந்த தேர்வு நடத்தப்பட்டது.

சென்னையில் தேர்வு நடைபெற்ற 10 மையங்களிலும் போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று நடந்த எழுத்து தேர்வை 41 திருநங்கைகள் உள்பட சுமார் 2½ லட்சம் பேர் எழுதினார்கள். சென்னையில் மட்டும் 12 ஆயிரம் பேர் எழுத்து தேர்வில் உற்சாகமாக கலந்துகொண்டனர்.


Next Story