தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது


தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x

தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது

மதுரை


மதுரை புதூர் காந்திபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் லதா(வயது 40). இவரது மகன் ராஜபாண்டி(19). இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு லதாவிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதே போன்று மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது லதா பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தனர். பெற்ற தாயை மகன் கத்தியால் குததிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Related Tags :
Next Story