குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரை தத்தனேரி களத்துப்பொட்டல் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்கான் என்ற உசேன் (வயது 24). இவர் மீது நகரின் பல்வேறு ேபாலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், இவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் இம்ரான்கானை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story