எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை


எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை
x

எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சூசைநாதன். இவரது மகன் ரேவந்த் டோமனிக் சாவியா (வயது 24). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் முன்தினம் இரவு கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் பகுதிக்கு வந்தார். திடீரென அவர் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்தார்.

இதில் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரேவந்த் டோமனிக்கின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story