யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி


யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி
x

யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் குற்றவியல் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கோவைக்கு சென்று கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது. பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் கோர்ட்டில் டிடிஎப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து புழல் சிறையில் டிடிஎப் வாசன் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் காஞ்சிபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஜாமீன் கோரி டிடிஎப் வாசன் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த ஜாமீன் மனுவை விசாரித்த காஞ்சிபுரம் குற்றவியல் கோர்ட்டு, யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Next Story