அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 26 March 2021 7:29 AM GMT (Updated: 26 March 2021 7:32 AM GMT)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச்செயலகத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து  ஆலோசனை நடத்தப்படும் என்றும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் பிரசாரம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story