தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நாளை தாராபுரம் வருகை


தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நாளை தாராபுரம் வருகை
x
தினத்தந்தி 28 March 2021 10:07 PM GMT (Updated: 28 March 2021 10:07 PM GMT)

தாராபுரத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாராபுரம் வருகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

தாராபுரம், 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தமிழக பா.ஜனதா தலைவா் எல்.முருகன் வேட்பாளராக போட்டியிடுகிறாா். அவரை ஆதாித்து பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அதற்கான பிரமாண்ட மேடை, பாா்வையாளா்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதனை பாா்வையிட பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளரும், பா.ஜனதா தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று தாராபுரம் வந்தார். பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாராபுரத்தில் 30-ந்தேதி (நாளை) காலை 11.30 மணிக்கு பிரதமா் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். கூட்டத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளா் எல்.முருகன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் 13 வேட்பாளா்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனா். இதில் கலந்து கொள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினா் திரண்டு வரவுள்ளனா்.

மத்தியில் பிரதமா் நரேந்திரமோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறாா். அதுபோன்று தமிழகத்தில் முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் நல்லதொரு ஆட்சியை நடத்தி வருகின்றனா். இந்த சிறப்பான ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

100 சதவீதம் ஆதரவு

தாராபுரம் தொகுதியில் மக்களின் ஆதரவு 100 சதவீதம் எங்களுக்கு உள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டில்பிற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு 95 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் மக்கள் அராஜக தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று முடிவு செய்துவிட்டாா்கள். அவா்கள் ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகாிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை இப்படி பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அவா்கள் மக்களுக்கு 11 முதல் 14 மணி நேர மின்தடையை கொடுத்தாா்கள். அதனால் மக்கள் அவா்களுக்கு நிரந்தர தடை கொடுத்து விட்டாா்கள்.

இப்போது மக்கள் அனைத்து வசதிகளும் பெற்று கட்டபஞ்சாயத்து, நிலஅபகாிப்பு இன்றி நிம்மதியாக இருக்கிறாா்கள். எனவே தற்போது தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. நண்பன், தி.மு.க எதிாி. அதுபோன்று பா.ஜனதாவும் சாி, அ.தி.மு.க. வும் சாி எங்களிடம் குடும்ப அரசியல் கிடையாது, மக்களுக்கான அரசியல் மட்டுமே உள்ளது. எனவே இந்த தோ்தலிலும் மக்கள் எங்களை வெற்றிபெற செய்வாா்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story